Site icon Tamil News

யாழ்.கோண்டாவிலில் தனியார் பேருந்து நடத்துனர் மீது கத்திக்குத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து வசாவிளான் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் நடத்துனர் ஒருவர் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மதியம் நடைபெற்றது. இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் நேற்று (20) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன்

இதனை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் ஜெகதீஸ்வரன் ஏற்பாடு செய்துள்ளார்.

Exit mobile version