Site icon Tamil News

ரஷ்யாவில் மறைந்த தளபதியின் திட்டத்தால் காலியாகிய சிறைச்சாலைகள்!

உக்ரேனில் பல கைதிகள் போரிட்டு இறந்ததால், ரஷ்ய சிறைகளும் தண்டனைக் காலனிகளும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறாக 100 சிறைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இப்போது கொலை செய்யப்பட்ட வாக்னர் குழுவின் கூலிப்படை அமைப்பான யெவ்ஜெனி ப்ரிகோஜின் அமைத்த இந்த திட்டம் பல சிறைச்சாலைகளை காலியாக்கியுள்ளது.

திட்டத்தின்படி கொலையாளிகள், கற்பழிப்பாளர்கள், கொள்ளையர்கள் மற்றும் குண்டர்கள் உட்பட சுமார் 150,000 ரஷ்ய கைதிகள் போர்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பக்முத் சண்டை போன்ற போர்களில் ரஷ்யாவின் பீரங்கி தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மார்ச் 2023 முதல் இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கைதிகளின் எண்ணிக்கை 20% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Exit mobile version