Site icon Tamil News

மீண்டும் பிரதமர் பதவி; மஹிந்த ராஜபக்சவுக்கு நாட்குறித்த ஆஸ்தான ஜோதிடர்!

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க எதிர்வரும் மே 7 ஆம் திகதியே பொருத்தமானது எனவரின் ஆஸ்தான ஜோதிடர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,என்னதான் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டாலும் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை மஹிந்த ராஜபக்ச இன்னும் கைவிடவில்லை.

பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில் அவரது ஆஸ்தான ஜோதிடரிடம் அண்மையில் ஆலோசனை கேட்டுள்ளார் மஹிந்த. “எதிர்வரும் மே 7 ஆம் திகதியே பொருத்தமானது.

அன்றைய தினமே பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் அரசியலில் உங்களுக்குத் தொடர் வெற்றி கிட்டும் என்றும் மஹிந்தவின் ஆஸ்தான ஜோதிடர் கூறியுள்ளாராம்.

Exit mobile version