Site icon Tamil News

இலங்கை ரூபாவின் பெறுமதி 18 வீதத்தால் அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் பெறுமதி 18.7 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இம்மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

மேலும் இந்த காலகட்டத்தில்  இலங்கை ரூபாய் பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை காட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதே காலப்பகுதியில் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் மதிப்பு 24.1 வீதத்தாலும் ஸ்டெர்லிங் பவுண்டுடன் 15.4 வீதத்தாலும் அதிகரித்துள்ளது.

இதேநேரம் யூரோ நாணயத்துடன் ஒப்பிடும்போது 17.5 வீதத்தாலும் இந்திய ரூபாயுடன் ஒப்பிடும்போது 18.7வீதத்தாலும் ரூபாயின் பெறுமதி உயர்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version