Site icon Tamil News

சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்கும் ஜனாதிபதியின் யோசனை! நிராகரித்த அரசமைப்பு பேரவை

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னத்தின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.

சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி யோசனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடியபோது ஜனாதிபதியின் யோசனை தோற்கடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைக்காலமாக சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டன.

Exit mobile version