Site icon Tamil News

யாழில் மின்சாரம் தாக்கி வயோதிப பெண்ணொருவர் பலி

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மின் மோட்டரை ஆழியை (சுவிச்) போட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் செந்தமிழ்ச்செல்வி (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்தோர் வெளியில் சென்று இருந்த நேரத்தில் வீட்டில் மின் மோட்டரை இயக்கி தண்ணீர் பெற முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

Exit mobile version