Site icon Tamil News

இந்த வருடத்திலிருந்து மருத்துவ கொடுப்பனவுகளை அதிகரிக்க ஜனாதிபதி நிதியம் தீர்மானம்

இந்த வருடத்தில் இருந்து மருத்துவ உதவி கொடுப்பனவுகளை 100% ஆக அதிகரிக்க ஜனாதிபதி நிதியம் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மருத்துவ உதவி செலுத்தப்படாத நோய்களுக்கான மருத்துவ உதவித் தொகையும் சேர்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மருத்துவ உதவி வழங்கும் போது கருத்தில் கொள்ளப்படும் மாத வருமான வரம்பு ரூ. 200,000.00 உயர்த்தப்பட்டுள்ளது.

நிதி பங்களிப்பு மற்றும் சுகாதார சேவைகளுக்கான பரந்த அணுகலை உறுதி செய்வதன் மூலம் மக்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version