Site icon Tamil News

ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு – சஜித் முன்னிலை

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கான மக்கள் ஆதரவு 04 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுகாதாரக் கொள்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஜூன் மாதம் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கையிலிருந்து இது தெரியவந்துள்ளது.

சஜித் பிரேமதாசவுக்கு 43 வீதமான மக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் மக்களின் ஆதரவு 6 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி அவர் பெற்ற வாக்குகள் 30 சதவீதமாகும்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் ஆதரவு மூன்று வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில் அது 20 வீதமாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மீதான மக்களின் எண்ணம் ஒரு வீதத்தால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய எண்ணிக்கை 07 வீதமாக உள்ளது.

அக்டோபர் 2021 முதல் இந்த ஆண்டு ஜூலை வரை, 18,213 பேர் இந்தக் கருத்துக் கணிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜூன் மாதத்தில் கணக்கெடுப்புக்காக 446 பேர் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரவிருக்கும் வாரங்களில் தரவு சேகரிக்கப்படுவதால், மிக சமீபத்திய 6-மாத மதிப்பீடுகள் மீண்டும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளதாக சுகாதார கொள்கைக்கான நிறுவனம் குறிப்பிட்டது.

Exit mobile version