Site icon Tamil News

ஜனாதிபதி தேர்தல் – கருத்துக்கணிப்பில் சஜித் முன்னிலை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு அறிக்கைகளின்படி சஜித் பிரேமதாச 48 வீதத்தைப் பெற்றுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அனுர திஸாநாயக்க 28% மற்றும் திரு ரணில் விக்கிரமசிங்க 18% வாக்குகளை இதுவரை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு எஞ்சிய மூன்று வீதத்தை சஜித் பிரேமதாச இலகுவில் பூர்த்தி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version