Site icon Tamil News

புலம்பெயர் தமிழரிடம் ஜனாதிபதி மன்னிப்புக்கோர வேண்டும் – சாணக்கியன்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் தமிழர் ஒருவரிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் நேற்றைய (ஜுலை 01) தினம் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி பிரான்ஸிற்கு சென்றிருந்தபோத அங்கு வைத்து புலம் பெயர் தமிழர் ஒருவர் இன அழிப்பு பற்றிய கேள்வியை முன்வைத்திருந்தார். ஆனால் அதற்கு பதிலளிக்காத ஜனாதிபதி அது விளங்கவில்லை எனக் கூறினார்.

அத்துடன் ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழில் கதைக்குமாறும் கூறியிருந்தார். இந்த விடயம் தொடர்பிலேயே ஜனாதிபதி மன்னிப்புக்கோர வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

ஆங்கிலம் என்பது வெறும் மொழிஅறிவு அல்ல. என்றும் சாணக்கியன் இதன்போது குறிப்பிட்டார்.

Exit mobile version