Site icon Tamil News

மன்னர் சார்லஸிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்வி!

இலங்கைக்கு மீண்டும் விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் உள்ளதா என பிரித்தானிய மன்னர் சார்ல்ஸிடம் ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்வியை லண்டனில் அவரை சந்தித்தபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எழுப்பியுள்ளார்.

மீண்டும் ஒருமுறை இலங்கை வருகின்றீர்களா நான் உங்களிற்கு அழைப்பு விடுக்கலாமா என ஜனாதிபதி ரணில், மன்னர் சார்ல்ஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, அதற்கு மன்னர் சார்ல்ஸ் சாதகமாக பதிலை அளித்துள்ளதாக தெரியவருகின்றது.

Exit mobile version