ஜப்பானில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
இஷிகவா பிராந்தியத்தில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூகம்பம் நிலைக்கொண்டிருந்தாக ஜப்பானிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இப்பூகம்பத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் வெளியிடப்படவில்லை.