Site icon Tamil News

ஜெர்மனியில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளங்குழந்தை – தாயாரை தேடும் பொலிஸார்

ஜெர்மனியில் நகரத்தில் பச்சிளங்குழந்தை ஒன்று வீதியில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

குழந்தையை தாய் மற்றும் வேறு ஒரு ஆண் நடு வீதியில் வைத்து விட்டு சென்றதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த வீதியில் சென்ற ஒரு சில நபர்கள் சில அடையாளங்களை கண்டுப்பிடித்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனடிப்படையில் குறித்த குழந்தையை காப்பாற்றி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாக தெரியவந்துள்ளது. வைத்தியசாலையில் இந்த குழந்தையின் முன்னேற்றம் மிகவும் வெற்றிகரமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்து இருக்கின்றார்கள்.

குறித்தகுழந்தையின் தாயாரை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரம் காட்டி வருவதாகவும், மேலும் குழந்தையை சுற்றி வைக்கப்பட்ட துணியில் துருக்கி எழுத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் கண்டெடுத்த இந்த துணியை பிரசுரித்து பொதுமக்களின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version