Site icon Tamil News

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் சகோதரர்! பொலிஸார் தீவிர விசாரணை

எழுவன்குளம பிரதேசத்தில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவரை தேடி வனாத்தவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

53 மற்றும் 14 வயதுடைய சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருவரும் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது.

சிறுமியின் தாயார் மிகவும் இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளதாகவும், பின்னர் அவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாத்தவில்லுவ பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version