Tamil News

ஆம்ஸ்ட்ராங் கொலை… நெல்சன் மனைவியிடம் போலிஸ் விசாரணை

பகுஜன சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5 ஆம் திகதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்களுக்கே தமிழ் நாட்டில் சரியான பாதுகாப்பு இல்லை என்று பலரும் கருத்துக்களை முன் வைத்தனர்.

இவரின் கொலை சம்பவம் தொடர்பாக 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் தலைமறைவாகிய ரவு சம்போ செந்தில் உள்ளிட்டவர்களை போலிசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரவு சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்னனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், தப்பி செல்வதற்கு முன்பு இருவரும் அடிக்கடி அலைபேசியில் பேசியதாகவும் தகவல் வெளிவந்த நிலையில், நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விஷயம் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Exit mobile version