Site icon Tamil News

இலங்கையில் சொர்க்கம் செல்வதற்கு தயாரான 30 பேரை கண்டுபிடித்த பொலிஸார்

இலங்கையில் சொர்க்கம் செல்வதற்காக மண்ணுலகில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி ஏழு பேரை உயிர்விட தூண்டிய ருவான் பிரசன்ன குணரத்னவின் கும்பலில் நேரடியாக தொடர்புடைய 30 பேர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த விசாரணையின் பிரகாரம், இந்தக் குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் குழுவில் சாமானியர்களுக்கு மேலதிகமாக சில பிக்குகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் பௌத்த தத்துவம் எனக் கூறி ருவன் பிரசன்ன பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரைப் பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட முப்பது பேர் தீவிரவாதக் கண்ணோட்டத்தில் இருந்து அவர்களை விடுவிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Exit mobile version