Site icon Tamil News

பச்சிளம் சிசுவை அநாதரவாக விட்டுச்சென்ற தாய் – கைது செய்த பொலிஸார்

பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை பெற்றெடுத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் சிசுவை அநாதரவாக விட்டுச்சென்ற சம்பவம் மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது.

சிசுவை மஹியங்கனை போதனா வைத்தியசாலைக்கு பின்னால் கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில் பெண் கைதுசெய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த தாயாரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கபட்ட குழந்தை, வைத்தியசாலையின் விசேட குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version