Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் 03 பேரைக் கொன்ற விஷ காளான் – சிக்கிய பெண்

ஆஸ்திரேலியாவில் 03 பேரைக் கொன்ற விஷ காளான் உணவை தயாரித்த பெண் கிழக்கு விக்டோரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை மாதம் 29ஆம் திகதியன்று, கிப்ஸ்லாந்தில் அவர் தயாரித்த மதிய உணவை உட்கொண்ட 03 பேர் இறந்தனர்.

கைது செய்யப்பட்ட 49 வயதுடைய பெண்ணின் வீட்டிலும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் சோதனையிட்டனர்.

எனினும், அவர் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

இங்கு 66 வயதுடைய பெண் மற்றும் அவரது சகோதரி, 70 வயதுடைய பெண் மற்றும் அவரது சகோதரியின் கணவர் 70 வயதுடைய ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version