Tamil News

திருகோணமலையில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான விமானம் – இரு வீரர்கள் பலி

திருகோணமலையில் அமைந்துள்ள சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் சற்று முன் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ் விபத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Exit mobile version