Site icon Tamil News

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள்!

உச்சக்கட்டக் கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கிறங்கடிக்கச் செய்துள்ளது.

‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘பஹீரா’, ‘தி லெஜெண்ட்’ படங்களின் மூலம் பிரபலமானார்.

இவர் நடிக்கும் படங்களை விட சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்குதான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டு அசத்தினார் யாஷிகா.

அதன் பிறகு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நைட் பார்ட்டி முடித்துவிட்டு இரவு வீடு திரும்பும்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்து ஒன்றில் யாஷிகா சிக்கினார். அவர் கார் ஓட்டி வர உடன் பயணித்த அவரது தோழி விபத்தில் இறந்தார். இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட யாஷிகா, தனது தோழி குறித்து வருத்தம் தெரிவித்துப் பல பதிவுகளைப் பகிர்ந்திருந்தார்.

இப்போது அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ளவர் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘சில நொடிகளில்’ ஆகிய படங்கள் வெளியானது. இதன் பிறகு, ‘இவன் தான் உத்தமன்’, ‘சல்ஃபர்’, ’சிறுத்த சிவா’ போன்றப் படங்களைத் தற்போது கைவசம் வைத்துள்ளார்.

Exit mobile version