Site icon Tamil News

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதை தடுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதி மன்றத்தில் இன்று மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

சட்டத்தரணி சான் ஜயசூரியா இம் மனுவை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டு உள்ளதால் இம்மனுவை சமர்ப்பிப்பதாக சட்டத்தரணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 30(1) பிரிவுக்கிணங்க அரசியலமைப்பை பாதுகாப்பதாக அவர் வாக்குறுதியளித்துள்ள போதிலும்அதன் 107 (7) பிரிவுக்கிணங்க உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகளை அவர் இதுவரை நியமனம் செய்யவில்லை.

அத்துடன் பதில் பொலீஸ் மா அதிபரை நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் தான் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி அந்த உத்தரவைப் புறக்கணித்துள்ளார்.

ஆனால் அமைச்சர் அலி சப்ரிக்கு மேலும் ஒரு அமைச்சர் பதவியை வழங்கி முரண்பாடான விதத்தில் செயற்பட்டுள்ளார்.

எனவே அரசியலமைப்பை ஜனாதிபதி மீறி செயல்படுவதால் அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யும் வகையில் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் இம்மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version