Site icon Tamil News

தங்க சுரங்கத்தில் கோர தீ விபத்து – பலர் பலி

தென் அமெரிக்க நாடான பெருவின் தெற்கே அரேக்விபா நகரில் லா எஸ்பெரான்சா என்ற சிறிய அளவிலான தங்கச்சுரங்கத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இந்த சுரங்கத்தை யானகிஹுவா நிறுவனம் இயக்கி வருகிறது.

நேற்று சுரங்க ஊழியர்கள் 300 அடி ஆழத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக சுரங்கப்பாதையில் பரவியதால் பணியாளர்கள் உடனடியாக வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு விரர்கள் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த தீ விபத்தில் 27 பேர் தீயில் சிக்கி உயிரிழந்ததாகவும், 175 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாகவும் யானகிஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல வருடங்களுக்கு பிறகு சுரங்கம் மோசமான விபத்தை சந்தித்துள்ளதாகவும், மின் கசிவு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் யானகிஹுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version