சிறிய காற்று மாசு துகள்களை சுவாசிப்பது பார்கின்சன் நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கார் வெளியேற்றங்கள் மற்றும் எரியும் மரத்திலிருந்து வெளிப்படும் புகைகளின் சிறிய துகள்களின் வெளிப்பாடு உடலில் வீக்கத்தைத் தூண்டும் என்று கருதப்படுகிறது. இது நோயைத் தூண்டும். இது உலகளவில் சுமார் 8.5 மில்லியன் மக்களை பாதிக்கிறது.
பார்கின்சன் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நரம்பியல் நிலையாகும், இது 70 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் இரண்டு சதவீதமானோரை பாதிக்கிறது.
ஆனால் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவீதம் பேர் – முக்கிய இரசாயனங்களை உற்பத்தி செய்யும் மூளை செல்கள் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.