Site icon Tamil News

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – டில்வின் சில்வா

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் கூடிய விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்,  அனுரகுமார திஸாநாயக்க நாளை (23) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டில்வின் சில்வா, அநுரகுமார திஸாநாயக்கவினால் வெற்றிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணராச்சி நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version