Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – தேர்தல் ஆணைய தலைவர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறுகளின் கணக்கீட்டில், எந்தவொரு வேட்பாளரும் முதல் சுற்றில் 50 சதவீத அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எண்ணும் பணி தொடங்கப்படும் என்றார்.

அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர்ந்த ஏனையோர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட இரண்டாவது விருப்பத்தேர்வு எண்ணும் பணியை தொடங்குமாறு அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Exit mobile version