Site icon Tamil News

பப்புவா நியூகினியா நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டது!

வடக்கு பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவினால் 670க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளின் புதிய கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலச்சரிவானது தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 370 மைல் (600 கிமீ) தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான கிராமத்தை தாக்கியது.

இதில் ஏராளமானவர்கள் மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதுவரை 670 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அச்சம் வெளியிட்ப்பட்டுள்ளது.

Exit mobile version