கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைவிடப்பட்ட பையில் இலத்திரனியல் சிகரெட்டுகளின் அடுக்கு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பை அண்மையில் மலேசியாவில் இருந்து இலங்கை வந்த விமான பயணி ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த வெளிநாட்டவர் காணாமல் போன தனது பையை எடுப்பதற்காக இன்று விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளார்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பையில் 245 இலத்திரனியல் சிகரெட்டுகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.