Site icon Tamil News

இலங்கையில் சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள்

பல்வேறு குற்றச் சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

2023ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் உள்ள ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் இந்த நிலை காணப்படுவதாக சிறைச்சாலை திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மொத்த சிறைகளில் 13,241 பேர் அடைக்கப்படலாம். ஆனால் தற்போது சிறைகளில் கிட்டத்தட்ட 29,000 கைதிகள் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் பத்தாயிரம் பேர் சந்தேகத்திற்குரியவர்கள். மீதமுள்ளவர்கள் கைதிகள். அதன்படி, சிறைகளில் அடைக்கப்படக்கூடிய 200 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஏற்கனவே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா சிறைச்சாலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை மூடுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

சிறையில் உள்ள ஆறு கைதிகளின் அம்மை நோயுடன் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் சந்தேகத்திற்குரிய பல நோயாளிகள் காணப்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version