Site icon Tamil News

சாதாரணத் தரப் பரீட்சை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்

கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் பரீட்சை பெறுபேறுகள் கணனி மயமாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த பொதுத் சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் 3,568 மையங்களில் நடைபெற்றது.

கணினி மயமாக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version