Site icon Tamil News

ஐ.எம்.எஃபின் இணக்கப்பாட்டிற்கு பிறகு அமெரிக்க தூதுவர் மற்றும் திறைசேரி செயலாளருக்கு இடையில் விசேட சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு எட்டப்பட்டதையடுத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது  சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய அங்கீகாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை  மீட்சியை ஊக்குவிப்பதற்காக வேலைத்திட்டம் என்பவற்றை உறுதிசெய்ய தேவையான மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து  நல்லாட்சி,  திறமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் அனைத்து இலங்கையர்களையும் ஈடுபடுத்தும் பொதுக் கலந்தாய்வை எளிதாக்கும் சீர்திருத்தங்கள்,  குரல்களின் பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version