Tamil News

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் நேபாள வீரர்களை நாடு திரும்ப உத்தரவு

ரஷ்ய படையில் பணியாற்றிய நேபாளத்தைச் சேர்ந்த 6 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தங்கள் நாட்டு படைவீரர்களை ரஷ்ய ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும், ஏற்கெனவே பணியாற்றி வரும் நேபாளிகள் அனைவரையும் திருப்பி அனுப்புமாறும் நேபாளம் வலியுறுத்தியுள்ளது.

‘கூர்கா’ என அழைக்கப்படும் நேபாள படைவீரர்கள் தங்களின் வீரம் மற்றும் போர் திறத்துக்குப் பெயர் பெற்றவர்கள். கடந்த 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவப் படையில் நேபாளம் படைவீரர்கள் பணிபுரிய மூன்று நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.இமாச்சல் மலைச்சாரலில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே உள்ள சிறிய நாடான நேபாளம், ரஷ்ய ராணுவப் படையில் தங்கள் வீரர்கள் பணிபுரிய ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.

Six Nepalis serving in Russian army killed in war

ரஷ்யாவானது கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் அருகில் உள்ள உக்ரைன் நாட்டுடன் போரில் ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 6 நேபாள வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரஷ்யா ராணுவப் படையில் சேர்ந்து உயிரிழந்த 6 நேபாள வீரர்களின் உடலை உடனடியாக தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறும் ரஷ்ய அரசை நேபாளம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ரஷ்ய ராணுவத்துக்கு பணியாற்றி உக்ரைனில் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. போர் நடக்கும் எந்த நாட்டின் ராணுவத்திலும் இணைய வேண்டாம் என நேபாள் குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.ரஷ்ய படையில் 150 முதல் 200 நேபாளிகள் பணியாற்றுவதாக அந்நாட்டில் உள்ள நேபாள தூதர் மிலான் ராஜ் துலதர் கூறியுள்ளதாக ‘காத்மாண்டு போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய படையில் உள்ள நேபாளிகள் திரும்ப அழைக்கப்படும் விவகாரம் குறித்து, நேபாளத்தில் உள்ள ரஷ்ய தூதரகம் உடனடியாக பதில் தெரிவிக்க மறுத்துவிட்டது.

Exit mobile version