Site icon Tamil News

ஹலவத்த பகுதியில் தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு!

ஹலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (27.08) இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலிப்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுமார் மூன்று வருடங்களாக தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சகோதரி வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் ஹலவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version