Site icon Tamil News

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

இதன் போது கோமரங்கடவல மயிலவெவ பகுதியைச் சேர்ந்த எஸ்.சமன் பிரியலால் (38வயது) உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நண்பரொருவரின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version