Site icon Tamil News

விடுதலைப் புலிகளின் தங்கதைத்தை தேடி நவீன உபகரங்களுடன் சென்றவர்கள் கைது

விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக அதிநவீன ஸ்கேனிங் இயந்திரத்தை எடுத்துச் சென்ற நால்வர் கிளிநொச்சி கனகபுரம் மகாவிரு பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். .

விசேட அதிரடிப்படையினரின் கிளிநொச்சி முகாமிற்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், காரில் ஸ்கேனரை ஏற்றிச் சென்ற நால்வரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதுடன், உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ஆண்டனாக்கள், பேட்டரிகள், பேட்டரி சார்ஜர்கள், பாகங்கள் உள்ளிட்ட ஸ்கேனர்கள் உள்ளன.

சந்தேகநபர்களிடம் இருந்து சொகுசு காரொன்றும் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

30 மற்றும் 58 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும், மாதம்பே, கண்டி, நாத்தாண்டிய மற்றும், மித்தெனிய ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version