Site icon Tamil News

மொரகஹஹேன தலகல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

மொரகஹஹேன தலகல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

40 வயதுடைய தச்சராக பணிபுரிந்த இவர் மொரகஹஹேன, கிரிவத்துடுவ, யகஹலுவ பிரதேசத்தில் வசித்து வந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பெண் உட்பட 4 பேர் இணைந்து குறித்த  கொலையை செய்ததாக  பொலிசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்துள்ளார்.

இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தேகநபரின் வீட்டிற்கு  சென்று அந்த வீட்டின் அபிவிருத்திக்காக பிரார்த்தனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் குறித்த வீட்டில் வசித்து வந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை எனவும், இதன்காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version