Site icon Tamil News

பதவிய ஓமரகட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

பதவிய ஓமரகட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓமரகட, பதவிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

இதன் தாக்குதலில் குறித்த நபரின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவரின் அருகில் வசிக்கும் 19 வயதுடைய மீனவ இளைஞரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக பதவிய பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version