Site icon Tamil News

மின்சார கட்டண அதிகரிப்பு மற்றும் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சாரத்தின் மீதான விலை திருத்தம் இருக்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார விலையை ஆண்டுக்கு இருமுறை திருத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு.

திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் இன்றி, ஆண்டு முழுவதும் நாடளாவிய ரீதியில் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Exit mobile version