Site icon Tamil News

இலங்கை மதுவரித்திணைக்களத்தின் அறிவிப்பு

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளைய தினத்தில் வடக்கு மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்திலும் பதுளை மாவட்டத்தின் மஹியங்கனை, ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளன.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினத்தில் மூடப்படவுள்ளன.

Exit mobile version