Site icon Tamil News

இலங்கையை பொறுப்பேற்கும் உரிமை எவருக்கும் கிடையாது – ரணில்

நாட்டின் எதிர்காலம் குறித்து பேச முடியாத எவருக்கும் நாட்டை பொறுப்பேற்கும் உரிமை கிடையாது என ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் உள்ள சில விடயங்களுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேசிய வங்கியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வங்கியாளர்கள் மற்றும் நிதி தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாடுகளின் தூதரகங்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ தேவைப்படும் கொள்கைகளை தமது கட்சி தயாரிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version