Site icon Tamil News

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் தகவல்

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் ஐஓசி ஆகியவற்றிடம் போதிய எரிபொருள் இருப்புக்கள் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் விலை மாற்றத்தை கருத்தில் கொண்டு எரிபொருளை ஆர்டர் செய்யாததால் சில பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டீலர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத எரிபொருள் இருப்பை எப்போதும் பராமரிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமத்தை இடைநிறுத்துமாறும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்தார்.

Exit mobile version