Site icon Tamil News

எந்தவொரு தேர்தலும் ஒத்திவைக்கப்படாது – பந்துல குணவர்த்தன!

எந்தவொரு தேர்தலையும் அரசாங்கம் ஒத்திவைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது வேறு எந்தத் தேர்தலையோ அரசாங்கம் ஒத்திவைக்காது என்றும், ஒவ்வொரு தேர்தலும் திட்டமிட்ட திகதியில் சட்டப்பூர்வமாக நடைபெறும் என்றும் கூறினார்.

இதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Exit mobile version