Site icon Tamil News

இலங்கையில் இரு சிறுவர்களுக்கு நிபா வைரஸ் இருப்பதாக வெளியாக செய்தி போலியானவை

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் எவரும் இதுவரை பதிவாகவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் நாட்டிற்குள் நுழைந்தால், அதைச் சமாளிக்க சுகாதாரத் துறைகள் தயாராக இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version