Site icon Tamil News

பிரான்ஸில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் – நம்பிக்கை இழந்த மக்கள்

பிரான்ஸில் புதிதாக நியமிக்கப்பட்ட கேப்ரியல் அத்தால் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பில் அவர் மீது நம்பிக்கை இல்லை என 52 சதவீதமான மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Elisabeth Borne பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட பல்வேறு விமர்சங்களை அடுத்து, திங்கட்கிழமை புதிய பிரதமராக 34 வயதுடைய கேப்ரியல் அத்தால் (Gabriel Attal) நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், “புதிய பிரதமர் சிறப்பாக செயற்படுவார் என உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?” என பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதி 52 சதவீதமானோரில் பத்தில் ஐவர் ‘இல்லை’ எனவும், 48% சதவீதமானவர்கள் ‘ஆம்’ எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் Elisabeth Borne பிரதமராக அறிவிக்கப்பட்டபோது 53% சதவீதமான மக்கள் ‘ஆம்’ என கருத்து தெரிவித்தனர்.

Exit mobile version