Site icon Tamil News

பிரான்ஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் செய்த அதிர்ச்சி செயல்

பிரான்ஸில் 23 இடங்களில் தீ வைத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு பிராந்திய பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த கோடை காலத்தின் போது Charente நகரைச் சூழ உள்ள பல்வேறு இடங்களில் தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதே நகரில் வசிக்கும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை, தாய் மற்றும் அவர்களது 17 வயதுடைய மகள் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

2022 ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது இவர்கள் பல்வேறு இடங்களிள், குப்பைத் தொட்டிகள் மற்றும் காடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளை அடுத்து இவர்கள் கடந்தவாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version