Tamil News

அதிர்ச்சி!! உயிருக்கு போராடும் நேத்ரன்.. மகள் கண்ணீர்

தமிழில் ஏராளமான சீரியல்களிலும், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் நேத்ரன். இவருடைய மனைவி தீபாவும் சீரியல் நடிகை ஆவார்.

இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கும் போது, காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.

குழந்தை பிறந்த பின்னர் தீபா, சில வருடங்கள் திரைப்படங்களில் இருந்து விலகிய நிலையில்… பின்னர் தன்னுடைய மகள்கள் இருவரும் வளர்ந்த பின்னர் மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார். அதன்படி நேத்ரன் தற்போது பொன்னி சீரியலில் நடித்து வரும் நிலையில், தீபா நேத்ரன், சிங்கப்பெண்ணே, முத்தழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேத்ரன் – தீபா நேத்ரனின் மகள் அபிநயா தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய தந்தை கடந்த சில வாரங்களாகவே உடல் நல குறைவால் பாதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கேன்சர் உள்ளது உறுதியாகி உள்ளது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டது. ஆனாலும் தற்போது ICU-வில் உள்ளார். காரணம் கல்லீரலும் பாதிக்க பட்டதாக கூறியுள்ளனர்.

இதை நான் பல நாட்களாகவே சொல்லலாமா என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் இப்போது சொல்கிறேன். காரணம் உங்கள் அனைவரின் பிரார்த்தனையும் அவரை காப்பாற்றும் என்கிற நம்பிக்கை உள்ளது. கையை மீறி போய் விட்டது. எனினும் அப்பா சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என்கிற நம்பிக்கை உள்ளது என, கலங்கியபடி பேசியுள்ளார். அபிநயாவிற்கு ரசிகர்கள் பலர் தங்களின் ஆறுதல்களை கூறி வருகின்றனர். மேலும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version