Site icon Tamil News

பெல்ஜியத்தில் 30க்கும் அதிகமான பாடசாலைகள் திடீரென மூடல்

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் மற்றும் பிரபாண்ட் பகுதியில் உள்ள பாடசாலைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் பெறப்பட்ட வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக பிரஸ்ஸல்ஸ் மற்றும் பெல்ஜியத்தின் பிரபாண்ட் பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

குறித்த பட்டியலில் 30 பாடசாலைகள் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வாலோனியா பிரஸ்ஸல்ஸ் கல்வி மையம், தகுதிவாய்ந்த அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடலில் உள்ளது.

இந்த நிலைமை நிலையான மதிப்பீட்டிற்கு உட்பட்டது. பல தளங்கள் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளன. நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version