Tamil News

முதல்முறையாக குழந்தைகளின் முகத்தை உலகுக்கு காட்டினார் நயன்தாரா

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இறுதியாக தனது இரு புதல்வர்களின் முகங்களையும் வெளி உலகுக்கு காட்டியுள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 31) அன்று சமூக ஊடக தளமான Instagram இல் தனது புதல்வர்களின் படங்களை பகிர்ந்துள்ளார். உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிடப்பட்டுள்ள புதல்வர்களை முதன்முறையாக காட்டியுள்ளார்.

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகின் முடிசூடா ராணியாக விளங்கி வருகிறார் நயன்தாரா.

தற்போது பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் பிரமாண்ட பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார் நயன்தாரா.

 

 

Exit mobile version