Site icon Tamil News

நல்லூர் மஹோற்சவத்தில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (08.09) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது,  திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

Exit mobile version