Site icon Tamil News

கலிபோர்னியாவில் துப்பாக்கியுடன் நின்ற நிர்வாணம் பெண் கைது

கலிபோர்னியாவில் பரபரப்பான பாலத்தில் காரை நிறுத்திவிட்டு, காரை விட்டு இறங்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நிர்வாணப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ-ஓக்லாண்ட் விரிகுடா பாலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அந்த பெண் காரிலிருந்து கத்தியுடன் இறங்கி மற்ற ஓட்டுனர்களை திட்டிவிட்டு மீண்டும் காரில் ஏறி ஓக்லாண்ட் நோக்கி சென்றதாகவும், ஆனால் மீண்டும் காரை நிறுத்தி துப்பாக்கியுடன் நிர்வாணமாக வந்து சுட ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, மற்றொரு சாரதி தன்னை நோக்கி சாரதி துப்பாக்கியை சுட்டிக்காட்டியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக பதிலுக்குச் செயற்பட்ட பொலிஸார், அந்த பெண்ணை கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version