Tamil News

ரஜினியின் கூலி படத்தில் இணைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “கூலி” திரைப்பட பணிகள் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 28ம் தேதி முதல் இப்படத்தில் பயணிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று முதல் படத்தில் நடிக்கும் கலைஞர்களின், கதாபாத்திர பெயரோடு அப்டேட்களை லோகேஷ் கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான அறிவிப்பின்படி, “மஞ்சுமல் பாய்ஸ்” படத்தில் நடித்து அசத்திய மலையாள திரைப்பட நடிகர் “சௌபின் ஷாஹிர்”, “தயால்” என்கின்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

தற்போது லோகேஷ் இப்படத்தில் இணைந்துள்ள மற்றொரு நடிகர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1991ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான “Shanti Kranti” என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த நிலையில், சுமார் 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவருடன் இந்த “கூலி” திரைப்படத்தில் இணைகிறார் தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா.

Exit mobile version